சென்னை பனையூரில் தங்கும் அறையில் திடீர் தீ விபத்து... 2 குழந்தைகளுடன் சிக்கித் தவித்த பெண் பத்திரமாக மீட்பு

0 2184

சென்னை பனையூரில் ஹார்டுவேர்ஸ் கடையின் மேல் உள்ள தங்கும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஆண் குழந்தைகளுடன் சிக்கிய பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

ஹார்டுவேர்ஸ் கடையின் மேல் தளத்தில் ஒரு குடோனும், வேலை செய்பவர்கள் தங்கும் அறையும் உள்ளது.

அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரின் மனைவி தனது குழந்தைகளுடன் அந்த அறையில் தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்றிரவு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அச்சமடைந்த அந்த பெண், தங்களது அறையிலும் தீ பரவும் எனக் கருதி கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டுள்ளார்.

அறையில் தீ பரவியதும் அவர் கத்திக் கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் உதவியுடன் போலீசார், ஜன்னலை உடைத்து ஏணி மூலம், குழந்தைகளையும் தாயையும் மீட்டனர்.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சு அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments