மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கான பணிகள் தீவிரம்..!

0 2176

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ள நிலையில், இந்திய அஞ்சல் வங்கியில் புதிய கணக்குகளை துவங்கும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் உணவு மற்றும் நுகர்வோர் தலைமை அலுவலகத்தில் இந்த பணிகள் நடைபெறுகின்றன.

நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ மகளிர், வீடுகளில் வேலை பார்க்கும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்டோர் பயன்பெறுவார்கள். திருவல்லிகேணி மண்டலத்தில் வார்டு வாரியாக தகுதியானவர்களை தொலைபேசி வாயிலாக அழைத்து உரிமைத் தொகைக்கான வங்கி கணக்கு இணைக்கப்படுகிறது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அஞ்சல் வங்கி கணக்குகளை தொடங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments