இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவுகள் - வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் ஜேசிபி உதவியோடு மீட்பு

0 1658

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதன் விளைவாக சார்மைல்-சாட்மைல் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன..  இந்தப் பாதையில் போக்குவரத்து சீரடைய சில நாட்களாகும் என்று கூறப்படுகிறது.

இதே போல் காமாண்ட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்டி-குலு இடையிலான பாதையும் மூடப்பட்டுள்ளது. இன்று அந்தப் பாதை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இமாச்சலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் ஜேசிபி இயந்திரம் பொருந்திய வாகனத்தின் உதவியோடு மீட்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments