கவனக்குறைவாக செயல்பட்ட வாகன ஓட்டியால், மற்றொரு பைக்கில் வந்த சகோதரர்கள் பரிதாபமாக பலி

0 5484

சென்னை மெரினா காமராஜர் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் காட்சிப் பதிவுகள் வெளியாகியுள்ளன.

நேற்று மாலை தேவ்சர்மா என்ற நபர், தனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்களை சரியாக கவனிக்காமல் திடீரென யு டர்ன் அடிக்க முயற்சித்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் தேவ்சர்மாவின் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த வாகனத்தில் வந்துகொண்டிருந்த இரண்டு வடமாநில இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

அதில் ஒருவர் எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது விழுந்து அதன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார். விசாரணையில் உயிரிழந்த இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்த பிரவீன், ரத்தன் என்பதும், அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது.

விபத்துக்கு காரணமான தேவ்சர்மா, படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments