“வீரப்பனிடம் 4 முறை துப்பாக்கி சண்டை நடத்தினேன்’’.. தாம் பணியாற்றிய முதல் காவல் நிலையத்தில் ஆய்வு செய்த பின் நினைவுகளை பகிர்ந்த டிஜிபி...

0 2365

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தாம் பணியாற்றிய முதல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, வீரப்பனுடனான துப்பாக்கிச்சண்டை நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

தாம் பணியாற்ற வந்த புதிதில் காவல் நிலையத்தில் இருந்த வசதிகள், அதன் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றையும் சக காவலர்களுடன் பகிர்ந்து கொண்ட அவர், காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.

பணியில் சேரும்போது எந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு, நேர்மையான மனதோடு இருந்தோமோ 35 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெறும் போதும், அதேபோல் இருப்பதுவே மிகப்பெரிய சாதனை என்றும் அப்போது அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments