ரஷ்யா மீது போர் தொடுக்கப்போவதாக 'வாக்னர்' ஆயுதக்குழு எச்சரிக்கை...!

0 3016

உக்ரைன் போரில் ரஷ்யா ஈடுபடுத்தி வந்த வாக்னர் ஆயுதக்குழு ரஷ்யாவிற்கு எதிராகவே திரும்பியது.

ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே ஷைகுவிற்கும், வாக்னர் தளபதி பிரிகோஷினுக்கும் அண்மை காலமாக கருத்து மோதல் இருந்து வந்தது.

ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் வாக்னர் வீரர்கள் 2,000 பேர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டிய பிரிகோஷின், அதற்கு பழி தீர்க்க தங்கள் படை வீரர்கள் 25,000 பேர் ரஷ்யாவிற்குள் ஊடுருவிவிட்டதாக மிரட்டல் விடுத்தார்.

ரஸ்டோவ் நகரிலுள்ள ராணுவ தலைமையகத்தில் தான் இருப்பதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நேரில் வந்து தனனி சந்திக்குமாறும் பிரிகோஷின் வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை, முக்கிய அரசு கட்டடங்கள், ரயில் நிலையங்களில் ரஷ்ய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments