சீல் வைக்கப்பட்ட செந்தில் பாலாஜி சகோதரர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை..!

0 2464

கரூரில் கடந்த மாத சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் சகோதரர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு தொடர்புடைய 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

அப்போது ஆட்கள் இல்லாத வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்குள் செல்ல முடியாததால், அந்த இடங்களுக்கு சீல் வைத்துவிட்டுச் அதிகாரிகள் சென்றனர். அந்த வகையில், கரூர் கோதை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஓட்டல் உரிமையாளர் கார்த்திக் மற்றும் அதிபன் ரமேஷ் ஆகிய இருவரது வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த வீடுகளில் சீல்களை அகற்றி, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments