சீனாவில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து... 31 பேர் உயிரிழப்பு

0 1309

சீனாவில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.

டிராகன் படகு திருவிழாவுக்காக சீனாவில் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டாட பலர், நேற்றிரவு யின்சுவான் நகரில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் குவிந்திருந்த போது இந்த கோர விபத்து நேர்ந்தது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி, உணவகம் முழுவதும் தீப்பற்றியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

தீயில் சிக்கிய 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு உயரிய சிகிச்சையளிக்க சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments