அறுந்து கிடந்த மின்கம்பி- மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

0 3446

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 20 நாட்களாக சீரமைக்கப்படாத மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

செஞ்சி காவல் உட்கோட்டம் கெடார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  சிறுவாலை கிராமத்தில் கடந்த ஜுன் 1-ஆம் தேதி காற்றுடன் கூடிய கனமழை பெய்த போது செல்வராஜ் என்பவர் நிலத்தில் கரும்பு தோட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.

இது குறித்து பூத்தமேடு மின்துறை அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும் கடந்த 20-வது நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுவாலை கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரின் மூத்த மகன் விஷ்ணுபதி வயல் வெளிக்கு சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து இளைஞரின் தந்தை அரிகிருஷ்ணன்  கெடார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments