மொராக்கோ கடலோரப் பகுதியில் 60 பேருடன் படகு கடலில் மூழ்கி விபத்து... 36 பேர் உயிரிழப்பு எனத் தகவல்

0 1461

மொரோக்கோ கடலோரப் பகுதியில் படகு மூழ்கியதில் புலம் பெயர்ந்த அகதிகள் 60 பேர் கடலில் மூழ்கினர்.

இதில் 36 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. ஆறு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 30 பேரை ஸ்பெயின்நாட்டு கடல் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். 

ஸ்பெயின் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் அந்தப் படகில் இருந்தவர்கள் 12 மணி நேரமாக உதவி கேட்டு தத்தளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

படகு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க விமானம் ஒன்று உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் படகு மூழ்கும் அறிகுறி ஏதும் இல்லை என்று அந்த விமானம் திரும்பி வந்துவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments