துக்க வீட்டில் வாணவெடி விட்டதில் ஏற்பட்ட மோதலால் விபரீதம்… நாட்டு வெடிகுண்டு வீசி லாரி டிரைவர் படுகொலை

0 2960

புதுச்சேரியில் துக்க வீட்டில் வாணவெடி விட்டதில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் லாரி டிரைவர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.

முதலியார்பேட்டையைச் சேர்ந்த ராஜ் என்பவர் தேங்காய் திட்டுப்பகுதியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று வாணவெடி வெடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இளைஞர்களுக்கும், ராஜூவுக்கும் வாணவெடி வெடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ராஜூவை வழிமறித்த அந்த  இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டை அவர் மீது வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுதொடர்பாக 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments