பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இன்று கோடையின் தொடக்கம்..!

0 1994

பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் கோடையின் தொடக்கத்தையும், ஆண்டின் மிக நீண்ட பகலைக் கொண்ட தினத்தையும் குறிக்கும் கோடைகால சங்கிராந்தி இன்று கொண்டாடப்படுகிறது.

இதற்காக இங்கிலாந்தில் 4 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மூதாதையர்களால் கட்டப்பட்ட உலக பாரம்பரிய தளமான ஸ்டோன்ஹெஞ்ச்சில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள், அங்குள்ள கல் வட்டத்திற்குப் பின்னால் சூர்ய உதயத்தை பார்த்து ஆரவாரம் செய்தனர்.

சூர்ய உதயத்தை பார்ப்பதற்காக இரவே ஸ்டோன்ஹெஞ்ச் பகுதிக்கு வந்துவிட்ட மக்கள், அங்கேயே புல்வெளியில் படுத்துறங்கி, அதிகாலை சூர்ய உதயத்தை பார்த்து சடங்குகளை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பலர் மலர் கிரீடங்கள் மற்றும் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments