'பிக்ஸல்' போன்களை இந்தியாவில் தயாரிக்க கூகுள் திட்டம்..!

0 1866

'பிக்ஸல்' ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தயாரிக்க கூகுள் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய நிறுவனங்களுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில், ஒப்பந்த தயாரிப்பாளர்கள் உதவியோடு கூகுள் நிறுவனம் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. தற்போது, சீனாவுக்கு வெளியேயும் தங்க ள் தயாரிப்புகளை விரிவுபடுத்தவுள்ளது.

இதற்காக, இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் சிலவற்றை சப்ளையர்களாக தேர்வு செய்து, தயாரிப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.

இந்தியாவை சேர்ந்த லாவா, பாரத் எப்.ஐ.எச்., டிக்ஸான் ஆகிய நிறுவனங்களிடம், இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையை, கூகுள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments