மார்ச் 2024க்குள் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள்.. அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி

0 1593

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இயங்கும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது வந்தே பாரத் ரயில்சேவைகளின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. அவை அனைத்தும் இருக்கை வசதியுடன் பகல் நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

படுக்கை வசதி கொண்ட முதலாவது ரயிலை விரைவில் இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான ரயில்பெட்டிகள் சென்னை ரயில்பெட்டித் தொழிற்சாலையில் முழுவீச்சில் தயாராகி வருவதாகவும், முதலில் சில ரயில்கள் மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments