எஸ்தோனியா நாட்டில் ஒரே பாலின திருமண சட்டம் நிறைவேற்றம்.. அடுத்தாண்டு முதல் அமல்

0 1522

எஸ்தோனியா நாட்டில் ஒரே பாலின திருமணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அந்நாட்டின் பிரதமர் Kaja Kallas தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது 55 உறுப்பினர்களில் 34பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அன்பு அனைவரிடத்திலும் உள்ளது என்றும் அனைவரின் உரிமைகளும் மதிக்கப்படும் என்றும் மக்கள் சுதந்திரமாக நேசிக்கக்கூடிய ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments