சர்வதேச யோகா தினத்தையொட்டி ஐநா.சபை பொதுச் செயலாளர் வாழ்த்து

0 1198

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐநா.சபையின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டாரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமைதியின் உறைவிடம் என்றும் யோகாவை அவர் புகழ்ந்துள்ளார். ஒற்றுமை உணர்வை வரவேற்று வளமான இணக்கமான உலகத்தையும் எதிர்காலத்தையும் காண்போம் என்று அவர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யோகா மனப்பதற்றத்தைக் குறைத்து இளைப்பாறுதல் அமைதியைத் தருகிறது என்று கூறிய குட்டாரஸ், சுய ஒழுக்கத்தையும் பொறுமையையும் கற்றுத் தருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments