பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ-பேருந்து மோதி விபத்து... 8 சிறுமிகள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

0 2829
பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ-பேருந்து மோதி விபத்து... 8 சிறுமிகள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

புதுச்சேரியில் தனியார் பேருந்து மோதி பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ நொறுங்கி 8 சிறுமிகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.

சுப்ரன் வீதியில் உள்ள தனியார் பள்ளிக்கு லால்பகதூர் சாஸ்திரி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது எதிரே வந்த பேருந்து திடீரென மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கியது.

காயமடைந்த சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வரும் சிறுமிகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் நேரில் பார்த்து பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments