ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் தீவிரமடைந்த போர்

0 1831
ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் தீவிரமடைந்த போர்

உக்ரைனில் ராணுவ குடோன்களில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அதிநவீன ராணுவ ஆயுதங்களை குண்டுவீசி அழித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் எம்.ஐ.8 ஹெலிகாப்டர் மற்றும் பல டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கார்கோனசென்கோ தெரிவித்துள்ளார்.

தங்களது ராணுவத்தினரின் கடும் தாக்குதலால் 6 இடங்களில் உக்ரைன் ராணுவம் பின்வாங்கியதாகவும், இதில் உக்ரைன் தரப்பில் அதிகளவில் உயிர்சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறியுள்ளார்.

அதேவேளை, ரஷ்யாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ள உக்ரைன்,  வெடிமருந்து கிடங்கு, எரிபொருள் கிடங்கு உள்ளிட்டவைகளையும் தகர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments