நேருக்கு நேர் மோதிக்கொண்ட தனியார் பேருந்துகள்… விபத்தில் 4 பேர் பலி - 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

0 3367

பண்ருட்டி அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி ஸ்ரீ துர்கா என்ற தனியார் பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.

மேல்பட்டாம்பாக்கம் அருகே அந்த பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து நிலை தடுமாறி எதிர்திசையில் பண்ருட்டியிலிருந்து கடலூர் நோக்கி சென்ற மற்றொரு தனியார் பேருந்து மீது மோதியது. இதில் இரண்டு பேருந்துகளின் முன்பக்கமும் நொறுங்கி உருக்குலைந்தன.

இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலும் 2 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments