நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற போது பாறை இடுக்கில் கால் சிக்கி மாணவர் உயிரிழப்பு....!

0 4282

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தடைசெய்யப்பட்ட பகுதியான சுண்டட்டி நீர்வீழ்ச்சியில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கோத்தகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது சமூக வலைதளம் மூலம் அறிந்த சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு கூகுள் மேப் மூலம் வழி கண்டுபிடித்து சென்றுள்ளனர்.

அதில் 5 மாணவர்கள் கரையில் இருக்க ஹரிஷ் என்ற 18 வயது மாணவர் மட்டும் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளார்.

தண்ணீரில் குதித்த ஹரிஷின் கால் பாறை இடுக்கில் சிக்கி மூழ்கியதை கண்ட சக நண்பர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், நீண்ட தேடலுக்குப்பிறகு  ஹரிஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments