வாகன தணிக்கையின் போது நிற்காமல் சென்ற கார்… விரட்டி சென்று பிடித்த காவலருக்கு கொலை மிரட்டல்

0 3571

தஞ்சை மாவட்டம்  சிங்க பெருமாள் குளம் அருகே வாகன  தணிக்கையின்போது , நிற்காமல் சென்றதுடன் காவலர்களை ஆபாசமாக பேசிய இருவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கபெருமாள் குளம் அருகே வகான தணிக்கை நடைபெற்ற போது அந்த வழியாக வந்த வாகனத்தின் ஓட்டுநர் காவல்துறையின் சட்ட விதிகளை மதிக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விரட்டி சென்று பிடித்த ஆயுதபடை காவலர் காட்டுராஜா என்பவரையும்  ஆபாசவார்த்தை பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனை வீடியோவாக எடுத்த காட்டுராஜா, அதனை ஆதாரமாக வைத்து  போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments