"நாடாளுமன்ற வளாகத்தில் வைத்தே பாலியல் தொந்தரவு" - ஆஸ்திரேலிய பெண் எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு

0 2221

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்தே தனக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய நாட்டு பெண் எம்.பி. நாடாளுமன்றத்தில் கண்கலங்க தெரிவித்தார்.

சுயேட்சை எம்.பி-யான லிடியா தோர்ப், லிபரல் கட்சி எம்.பி. டேவிட் வான் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நேற்று நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இன்று மீண்டும் உரையாற்றிய லிடியா தோர்ப், சக்திவாய்ந்த பொறுப்பு வகிக்கும் சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஆபாசமாக வர்ணித்ததாகவும் கண்கலங்க தெரிவித்தார்.

அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்த லிடியா, நாடாளுமன்றத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments