''செந்தில் பாலாஜி கைதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை..'' - செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர்..!
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
உடனடியாக பைபாஸ் செய்ய வேண்டி உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அறுவை சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் இரு மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தாக்கல் செய்தார்.
இதன் மீதான விசாரணையின் போது தமது வாதத்தை முன்வைத்த வழக்கறிஞர் இளங்கோ, மனித உரிமையை மீறி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ரிமாண்டை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
செந்தில் பாலாஜியிடமும், அவரது குடும்பத்தினரிடமும் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய வழக்கறிஞர் இளங்கோ, கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
Comments