சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்து செயின் பறிப்பு - காவல்துறையினர் வலைவீச்சு

0 2191

சென்னை சைதாப்பேட்டையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக் கொடியை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருணாநிதி தெருவை சேர்ந்த பூங்கொடி என்பவர் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் திடீரென செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

நிலைதடுமாறிய பூங்கொடி தெருவில் விழுந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோவை அதன் ஓட்டுநர் உடனடியாக நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

5 சவரன் தாலிச் சங்கிலி மற்றும் 2 சவரன் செயின் பறிக்கப்பட்ட நிலையில், பூங்கொடிக்கு கழுத்திலும், கீழே விழுந்ததில் கை, கால்களிலும் காயம் ஏற்பட்டது. வழிப்பறி திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments