தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு..!

0 2931

கோடை விடுமுறை முடிந்ததையடுத்து தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறப்பையொட்டி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு செய்தார். பள்ளிகளுக்கு வந்த மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து அவர் வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், அரசு பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை காட்டிலும் நடப்பாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் இலக்குடன் ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments