ஷேர் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணிடம் நகை கொள்ளை.. ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது!

0 2285

மதுரையில், ஷேர் ஆட்டோவில் பயணித்த தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்க நகைகளை பறித்துச் சென்ற ஆட்டோ கொள்ளையர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை இலந்தைகுளத்தில் உள்ள HCL நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் தென்காசியை சேர்ந்த ரிபானா பாத்திமா என்ற இளம்பெண், பணிமுடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக மேலூர் பைபாஸ் ரோடு, கருப்பசாமி கோயில் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி உள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் ஆட்டோ ஓட்டுநரும் அவனது கூட்டாளிகள் இருவரும் பாத்திமாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த செயின் மற்றும் இரு மோதிரங்களை பறித்துக் கொண்டு நடுவழியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி, மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த அய்யனார் மற்றும் அவனது கூட்டாளிகள் இருவரையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments