குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு கத்தி குத்து

0 1481

மயிலாடுதுறையில் குடி போதையில் தகராறு செய்த இளைஞரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை இருவர் கத்தியால் குத்தி விட்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பேங்க் ரோட்டில் ரூபன் என்பவர் குடிபோதையில் சாலையில் செல்வோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை ஆட்டோ ஓட்டுநர்கள் ஜான் ,குமரேசன் , வினீத் ஆகிய மூவரும் தாக்கியுள்ளனர்.

அப்போது அவர்களை ரோந்து வந்த போலீசார் விரட்டியுள்ளனர்.இதையடுத்து ரூபனின் நண்பர்கள் அஜய்,சத்தியா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து ரூபனை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் குமரேசனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments