''மக்களின் நம்பிக்கை தான் மிக பெரிய சொத்து... அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன்'' - சச்சின் பைலட்..!

0 1145

மக்களின் நம்பிக்கை தான் தனது மிகப்பெரிய சொத்து என்றும், அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

தௌசாவில் தனது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட் சிலையை திறந்து வைத்து பேசிய சச்சின் பைலட் இவ்வாறு கூறினார்.

ராஜஸ்தானில் ஊழலுக்கு இடம் இருக்கக்கூடாது என்றும், அரசு பணியாளர் தேர்வாணையம் கலைக்கப்பட்டு மீண்டும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தனது தந்தை எந்த நிலையிலும் கொள்கை மாறியதில்லை என கூறிய சச்சின் பைலட், தானும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பேன் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments