மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி பேரணி..!

0 1567

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆளும் ஆம் ஆத்மி கட்சி இன்று பிரமாண்ட பேரணியை நடத்துகிறது.

மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த பேரணி நடத்தப்படுவதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்கும் பேரணியில், கட்சியினர், பொதுமக்கள் என ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி பேரணியை முன்னிட்டு ராம் லீலா மைதானத்தில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments