மிகப்பெரிய அணு மின்நிலையத்தின் கடைசி உலையும் மூடி குளிர்விப்பு.. உக்ரைன் அணுசக்தி துறை நடவடிக்கை..!

0 1247

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தின் கடைசி உலையை மூடி குளிர்விக்க உக்ரைன் அணுசக்தி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

காக்கோவா அணை மீது குண்டு வீசி அணை தகர்க்கப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணு உலை மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 அணு உலைகள் மூடப்பட்டு விட்ட நிலையில் கடைசி அணு உலையும் மூடி குளிர்விக்கப்பட்டது.

அணை உடைப்பால் அணு உலைக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை என்ற போதும் அணு மின்நிலையத்திற்கு அணையில் இருந்து நீரைக் கொண்டு வரும் குழாய்கள் உடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments