ரெயில்வே கட்டுப்பாட்டறையில் நுழைந்து கடும் தாக்குதலில் ஈடுபட்ட கஞ்சா குடிக்கிகள்..! கேள்விக்குறியான பாதுகாப்பு

0 1981

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே கட்டுப்பட்டு அறைக்குள் புகுந்து கஞ்சா குடிக்கிகள் பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ரயில் நிலையத்தில் அரிச்சந்திராபுரம் பகுதியை சார்ந்த இர்பான் என்பவரை கத்தியால் தாக்கிய மூர்த்தியை அரக்கோணம் ரயில்வே போலீசார் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் அமர வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அரிச்சந்திரா புரத்தைச் சேர்ந்த இர்ஃபானின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஐந்து பேர் திடீரென்று ரெயில்வே மாஸ்டரின் அறைக்குள் ஆவேசமாக புகுந்து பயங்கர ஆயுதங்களால் மூர்த்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

போலீசார் தடுத்தும் அடங்காமல் கடுமையாக தாக்கிவிட்டுச்சென்றனர். 

இர்ஃபானை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்தில் மூர்த்தியையும், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக இர்பானின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஐந்து பேரை போலீசார் வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை அரக்கோணம் ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை மோதலில் திருவாலங்காடு ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments