கல்லூரி மாணவியை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு முன்னாள் காதலன் எடுத்த வீபரீத முடிவு

0 1991

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், கல்லூரி மாணவியை பட்டாக்கத்தியால் வெட்டிய முன்னாள் காதலன், தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக இருந்த விர்ஜின் ஜோஷுவாவும், கலைக்கல்லூரியில் படித்துவந்த டெனிஷாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 மாதங்களாக விர்ஜின் ஜோஷுவா உடன் பேசுவதை டெனிஷா நிறுத்திவிட்டதாக தெரிகிறது. அவரை தொடர்பு கொண்ட ஜோஷுவா, கடைசியாக ஒரு முறை தம்மை பார்க்க வருமாறும், அவ்வாறு வந்தால் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தந்து விடுவதாகவும் டெனிஷாவை தென்னந்தோப்பு ஒன்றுக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது.

அங்கு, தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் டெனிஷாவை ஜோஷுவா தலையில் பலமாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த டெலிஷாவை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய ஜோஷுவா, ரயில் ஒன்றின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments