தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது தவறு தான் - அமைச்சர் அன்பில் மகேஸ்

0 2228

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழக பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தியது தவறு தான் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

சென்னை பரங்கிமலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில சிலம்பப் போட்டியை தொடங்கி வைத்து பேசிய அவர், வரும் ஆண்டு தேசிய போட்டிகளில் மாணவர்கள் நிச்சயம் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் பெரும்பாலான சனிக் கிழமைகளில் பாட வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments