தற்காலத்தில் உருவாகியுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி இளைஞர்கள் கிரிக்கெட் வீரர்களாக உருவாக வேண்டும் - நடராஜன்

0 1561

தற்காலத்தில் உருவாகியுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி கிராமப்புற இளைஞர்கள் அதிகளவில் கிரிக்கெட் வீரர்களாக உருவாக வேண்டும் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தில் தமிழ்நாடு மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து உருவாக்கி உள்ள புதிய வலை பயிற்சி அரங்கை நடராஜன் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், தான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலத்தில் இது போன்ற பயிற்சி மையங்கள் இல்லை என்றார். தற்போதுள்ள வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

புதிய வலை அரங்கில் நடராஜன் பவுலிங் செய்து பார்த்தார். அங்கிருந்த இளம் விளையாட்டு வீரர்களை அவர் உற்சாகப்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments