அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு குறித்து அமித்ஷா தலைமையில் விரைவில் உயர்மட்டக்கூட்டம்

0 1365

அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆலோசிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக்கூட்டம் நடைபெற உள்ளது.

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவிருப்பதால்  பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் அமைதியைக் குலைக்க சதித்திட்டம் தீட்டிவருவதாக உளவுத்துறை எச்சரிக்கைகளை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.

அமர்நாத் குகைக்குச் செல்லும் இரண்டு பாதைகளிலும் பனிமூடிக்கிடப்பதால், ஜூன் 15 க்குள் பனியை நீக்கி பாதையை செப்பனிடும் பணியை மேற்கொள்ளுமாறு எல்லைப்புற சாலைகளை பராமரிக்கும் ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments