ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த திருடனை சேலத்தில் மடக்கிப் பிடித்த ரயில்வே போலீசார்..!

0 2625

ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த திருடன் ஒருவனை சேலத்தில் ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

சென்னையில் இருந்து பழனி வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேலத்தில் அதிகாலை வேளையில் நின்ற போது, ஏ.சி. கோச்சில் இருந்து ஒருவர் இறங்கிச் செல்வதை, ரயிலின் டிக்கெட் பரிசோதகர் பார்த்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் ஏ.சி. கோச்சில் சேலத்தில் இறங்க வேண்டியவர்கள் யாரும் இல்லை என்பதால், சந்தேகமடைந்து ரயில்வே போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார்.

இதன்பேரில், அந்த நபரை ரயில்வே போலீசார் பிடித்து சோதித்துப் பார்த்ததில் அவரிடம் 17 சவரன் நகைகள், செல்ஃபோன் உள்ளிட்டவை இருந்ததாக தெரிகிறது. விசாரித்த போது, திருச்சியை சேர்ந்த முத்துராமன் என்ற அந்த நபர், ரயில் பெண் பயணி ஒருவரிடம் இருந்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறினர்.

இது போல பல முறை ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்ததாகவும் அந்நபர் போலீசாரிடம் தெரிவித்தார். அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments