ரயில் பாதையில் தென்னைமரக் கட்டை போடப்பட்ட விவகாரம் : சம்பவ இடத்தில் ரயில்வே டிஎஸ்பி நேரில் ஆய்வு

0 3063
ரயில் பாதையில் தென்னைமரக் கட்டை போடப்பட்ட விவகாரம் : சம்பவ இடத்தில் ரயில்வே டிஎஸ்பி நேரில் ஆய்வு

சென்னையை அடுத்த திருநின்றவூர் ரயில் பாதையில் தென்னை மரக்கட்டை கிடந்த இடத்தில் ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

திருநின்றவூர் நேரு நகரில் செந்தில் என்பவர், வீட்டில் தென்னை மரத்தை வெட்டி  ரயில் தண்டவாளம் அருகே  போட்டுள்ளார். மர்ம நபர்கள் சிலர் இதனை எடுத்து ரயில் பாதையில் வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நள்ளிரவில் அவ்வழியே வந்த ரயிலின் இன்ஜினில் தென்னை மரக்கட்டை சிக்கியதால் ரயில் ஓட்டுநர் அதனை அப்புறப்படுத்தி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து ரயில்வே போலீஸ் டிஎஸ்பி முத்துக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். அதே பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வைத்து அவர் விசாரணை மேற்கொண்டார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments