ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை.. மீட்புப் பணிகள் தீவிரம்..!

0 2518

மத்தியப் பிரதேசம் மாநிலம் சேஹோர் மாவட்டத்தில் உள்ள முங்காவல்லி கிராமத்தில் இரண்டரை வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

அங்கு மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆழ்துளை கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிருஷ்டி என்ற பெண் குழந்தை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. குழந்தை சுமார் 30 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் 22 அடி ஆழத்துக்கு அருகில் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயன்று வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments