ராஜஸ்தானின் சில பகுதிகளில் பலத்த புழுதிப் புயல், சுழன்றடித்த சூறாவளி
ராஜஸ்தானின் சில பகுதிகளில் கடுமையான புழுதிப் புயல் வீசியது. அதனைத் தொடர்ந்து கனமழையும் பெய்துள்ளது.
சுழன்றடித்த புழுதிக் காற்றால் வாகன ஓட்டிகளுக்கு எதிரே காட்சிகள் மறைக்கப்பட்டதனால் போக்குவரத்துத் தேங்கியது. சில இடங்களில் மிகவும் தீவிரமான மண் புயல் வீசியது.
தொடர்ந்து கனமழை கொட்டியது. இதனால் Churu, Taranagar, Sardarshahar, Rajgarh உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சூறைக்காற்றால் பல இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. பல மரங்களும் மின்கம்பங்களும் தகர மேற்கூரைகளும் சாய்ந்து விட்டன.
Comments