குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது..!

0 2590

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுரினாம் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்' விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

3 நாள் பயணமாக சுரினாம் சென்றுள்ள குடியரசு தலைவர் முர்மு, 1873-ம் ஆண்டு சுரினாமுக்கு கப்பல் மூலம் இந்தியர்கள் சென்றதன் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கலாச்சார விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, தமக்கு வழங்கப்பட்டுள்ள சுரினாமின் உயரிய விருதை இந்திய-சுரினாமியர் சமூகத்திற்கு அர்ப்பணிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

இந்தியாவுக்கும் சுரினாமுக்கும் இடையே கலாசார ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட முர்மு, சுரினாம் வந்திருப்பது தமது சொந்த வீட்டிற்கு வந்திருப்பதைப் போல இருப்பதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments