அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தால் ஏற்க வேண்டாம் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

0 3744

அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள் என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சைபர் குற்றங்கள் மற்றும் ஸ்பாம் அழைப்புகள் தொடர்பான பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அழைப்பவர் அடையாளத்தை குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பும் வரை அறிமுகம் இல்லாதவரின் அழைப்பை ஏற்க வேண்டாம் என்று கூறினார்.

தொலைத் தொடர்பு மோசடிகள் குறித்து புகார் அளிக்க சஞ்சார் சாத் என்ற இணையதளத்தையும் அண்மையில் அவர் தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments