மணிப்பூரில் கலவரம் பரவுவதைத் தடுக்க இணையசேவை தடை நீட்டிப்பு

0 995

மணிப்பூரில் கலவரம் மேலும் பரவாமல் தடுக்க இணையசேவைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில், வீடுகள் மற்றும் வளாகங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் இன்னும் நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டத்தை பாதிக்கக்கூடிய வதந்திகள் மற்றும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பரவுவதைத் தடுக்க ஏழாவது முறையாக இணைய சேவைகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments