போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை - சாக்சி மாலிக்

0 2051

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் மீண்டும் ரயில்வே பணியில் இணைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல், தேசிய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு எதிராக போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளில் சிலர் கடந்த 3-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். இதைத் தொடர்ந்து மூவரும் வாரத்தின் முதல் நாளில் வடக்கு ரயில்வேயில் தங்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்.

இதுகுறித்து விளக்கமளித்த சாக்சி மாலிக், தாங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை என்றும் நீதிக்கான போராட்டம் தொடரும் என்றும் கூறினார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் டிவிட்டரில் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments