ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கத்தை இடுப்பில் கட்டி கடத்தல்.. தங்க நகையை பறிமுதல் செய்த போலீசார்

0 1848

சென்னை எம்.கே.பி. நகரில் உரிய ஆவணங்களின்றி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகையை இடுப்பில் கட்டி வந்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.

எம்.கே.பி. நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆட்டோவில் வந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் தனி அறையில் வைத்து சோதனை செய்தபோது அவரது இடுப்பில் தங்க சங்கிலி கட்டிவைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் ராஜீவ்ராம் என்ற அந்த நபர், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைக்கு நகையை எடுத்து வந்ததாக கூறினார்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், ராஜீவ் ராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments