சென்னையில் இருந்து ஒடிசா வழியாக செல்ல வேண்டிய 2 ரயில்கள் இன்று ரத்து..!

0 1589

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வர, பத்ரத்தில் இருந்து சென்னைக்கு இன்று மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இன்று பயணிகளுடன் புறப்படும் சிறப்பு ரயில், நாளை மதியம் சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரயில் விபத்தின் காரணமாக, சென்னையில் இருந்து ஒடிசா வழியாக செல்ல வேண்டிய 2 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமருக்கு செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், சென்னையிலிருந்து சண்ட்டர்காச் செல்லும் அதி விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments