மீட்பு பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் திறம்பட செய்து முடித்தனர் - ஒடிசா தலைமை செயலாளர்

0 2654

ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் திறம்பட செய்து முடித்ததாக ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

7 தேசிய பேரிடர் மீட்பு குழு, 5 ஒடிசா மாநில மீட்பு குழு, 24 தீயணைப்பு படை வீரர்கள் குழு, உள்ளூர் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், உடல்களை அடையாளம் கண்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments