ஒடிசா ரயில் விபத்து.. காயமடைந்தவர்களுக்கு விடிய விடிய காத்திருந்து ரத்த தானம் செய்த இளைஞர்கள்..!

0 2419

ஒடிசா பாலசோர் ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்த தானம் செய்தனர்.

இளைஞர்கள் பலர் விடிய விடிய வரிசையில் காத்திருந்து ரத்த தானம் செய்தனர்.

ரத்த தானம் செய்துவரும் உள்ளூர் மக்களின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். நேற்று ஒரே இரவில் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாகவும், தற்போது வரை 900 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாகவும் ஒடிசா மாநில தலைமை செயலாளர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments