விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் உறுதி..!
ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலசோரில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழு கவனம் செலுத்தப்படுவதாகக் கூறினார்.
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்கு பிறகு, சீரமைப்பு பணி தொடங்கும் என்றும் தெரிவித்தார். விரிவான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ரயில்வே அமைச்சர், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
Comments