2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. 4 பேர் உயிரிழப்பு..!

0 3718

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

ஒட்டன்சத்திரம் சீத்தப்பட்டியை சேர்ந்த ரத்தினம் மற்றும் அவருடைய நண்பர் சேகர் ஆகிய இருவரும் ஒரு இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மீது ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் துரைராஜ் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் மோதியது.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்களிலும் சென்ற 4 பேரும் உயிரிழந்தனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் நின்றிருந்த ஒரு லாரியின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த பிரவீன் குமார் என்பவர் காயமடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments