நைஜீரியாவில் நாளை முதல் 3 நாள்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம்..!

0 1197

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நாளை முதல் 3 நாள்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

நைஜீரிய அதிபர் தேர்தலில் போலா அகமது தினுபு வெற்றி பெற்றுள்ளார். நாளை மறுதினம் நடைபெறும் விழாவில் அவர், நைஜீரிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.

இதில் பங்கேற்பதற்காக ராஜ்நாத் சிங், நாளை முதல் 3 நாள் பயணமாக நைஜீரியா செல்கிறார்.

இந்த பயணத்தின் இடையே முன்னாள் நைஜீரிய அதிபர் முகம்மது புகாரியையும் நேரில் சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments